உள்ளூர் செய்திகள்

டிராக்டர் திருடிய வாலிபர் கைது

Published On 2022-11-28 09:29 GMT   |   Update On 2022-11-28 09:29 GMT
  • டிராக்டர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
  • தோட்டத்தில் நிறுத்தி வைத்தனர்

கரூர் :

கரூர் மாவட்டம், வெள்ளியணை, பழைய ரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 49) விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி, தனது தோட்டத்தில், டிராக்டரை நிறுத்திவிட்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது, டிராக்டரை காணவில்லை. இதுகுறித்து, தங்கவேல் போலீசில் புகார் செய்தார். பின், வெள்ளியணை போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த, மணிகண்டன் (32)என்பவர் டிராக்டரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News