உள்ளூர் செய்திகள்

உளுந்து அறுவடை பணி தீவிரம்

Published On 2023-03-11 08:07 GMT   |   Update On 2023-03-11 08:07 GMT
  • கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக உளுந்து சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது
  • கிலோ ரூ.70க்கு விற்பனையால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்துள்ளது

கரூர், 

புனவாசிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து அறுவடை பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, புனவாசிப் பட்டி, கொம்பாடிப்பட்டி, நரசிங்கபுரம், மத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக உளுந்து சாகுபடி செய்துள்ளனர். தற்போது கிணற்று நீர் பாசன முறையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.இதில் உளுந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராகின. இதையடுத்து அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உளுந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்ப னையாகிறது. இதன் மூலம் விவசாயி களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.

Tags:    

Similar News