உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவர் கைது

Published On 2022-09-06 06:25 GMT   |   Update On 2022-09-06 06:25 GMT
  • சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்
  • இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்,

 கரூர்:

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் புவனேஷ் பாபு (வயது 20). சென்னையில் தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கரூர் அருகே வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி வெண்ணைமலை முருகன் கோவில் முன் புவனேஷ் பாபு சிறுமியை திருமணம் செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனேஷ் பாபுவை வெங்கமேடு போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News