உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே டெம்போ-அரசு பஸ் மோதல்

Published On 2022-10-09 08:19 GMT   |   Update On 2022-10-09 08:19 GMT
  • டிரைவர்கள் படுகாயம்
  • பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 55).டெம்போ ஓட்டி வருகிறார்.நேற்று காலை இவர் ஜல்லி ஏற்றிக்கொண்டு சவாரி சென்றார்.

டெம்போ பெத்தேல்புரம் அருகே செல்லும்போது எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திங்கள்நகர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது எதிர்ப்பாராமல் டெம்போ மோதியது.

இதில் டெம்போ டிரைவர் வர்கீஸ், அரசு பஸ் டிரைவர் பாஸ்கரன் (55) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.வர்கீஸ் தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், அரசு பஸ் டிரைவர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிர்ஷ்டவசமாக பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags:    

Similar News