உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
- ஏற்காட்டில் தங்க சங்கிலி வாங்கிய மர்ம நபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
- இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள் இதுகுறித்து ஏற்காடு போலீசில் புகார் செய்தார்.
ஏற்காடு:
ஏற்காடு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் மூதாட்டி லட்சுமி அம்மாள் . இவரது கடைக்கு நேற்று சிக்கன் வாங்க மர்ம நபர் வந்தார். அப்போது அவர் லட்சுமியிடம் நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகை மாடல் நன்றாக உள்ளது. பக்கத்து கடையில் காய் வாங்கி கொண்டிருக்கும் என் மனைவியிடம் இதை காண்பித்து தருகிறேன் என கூறியுள்ளார்.
இதை நம்பிய லட்சுமி தங்க நகையை கழட்டி கொடுத்தார். தங்க சங்கிலி வாங்கி மர்ம நபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள் இதுகுறித்து ஏற்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பக்கத்து கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடி வருகிறார்.