உள்ளூர் செய்திகள்

சேலம் சீலநாயக்கன்பட்டியில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பல்

Published On 2022-07-05 09:45 GMT   |   Update On 2022-07-05 09:45 GMT
  • மோட்டார் சைக்கிளின் சாவி தொலைந்ததால் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்றார்.
  • பின்னர் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீ சில் புகார் கொடுத்தார்.

சேலம்:

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பிர பாகரன் (வயது 25). இவர் நேற்றிரவு 11.30 மணியளவில் சீலநாயக்கன்பட்டி திவ்யா தியேட்டர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளின் சாவி தொலைந்ததால் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்றார்.இதற்கிடையே அந்த வழியாக வந்த 2 பேர் அவரது மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் கூச்சலிட்டார். பின்னர் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீ சில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News