உள்ளூர் செய்திகள்

தேங்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

Published On 2022-07-16 09:47 GMT   |   Update On 2022-07-16 09:47 GMT
  • காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
  • தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டத்தில்,அரூர்,கீரைப்பட்டி, நரிப்பள்ளி, கம்பைநல்லுார்,பறையப்பட்டிபுதுர், தோட்டம், வாழைத் வள்ளி மதுரை, அச்சல்வாடி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன.

காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு ஒரு தேங்காய், 20 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது, முதல், 6.50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News