உள்ளூர் செய்திகள்
- ஜலகண்டாபுரம் அருகிலுள்ள தோரமங்கலம் பகுதியில் லாரி பட்டறை அகற்றகோரி தகராறு செய்தார்.
- வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தாரமங்கலம்:
ஜலகண்டாபுரம் அருகிலுள்ள தோரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 30). இவர் தாரமங்கலம் குறுக்குப்பட்டியில் முருகேசன் என்பவரின் நிலத்தில் லாரி பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார் .
நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் பிரவீன் குமாரிடம் வந்து நீங்கள் பட்டறை வைத்துள்ள இடம் எனக்கு சொந்தமானது என்று கூறி தகராறு செய்தார்.
வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் பிரவின்கு மார், குழந்தைவேல் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.