உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2022-09-03 08:39 GMT   |   Update On 2022-09-03 08:39 GMT
  • ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியதுரை (வயது 32).
  • மனைவி கோபித்துக்கொண்டு அவரை பிரிந்து சென்றுவிட்டதால் மன வேதனை அடைந்த பெரியதுரை சம்பவத்தன்று விஷம் குடித்தார்.

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியதுரை (வயது 32). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சமீப காலமாக அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் கடன் தொல்லையாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இந்த நிலையில் அவரது 2-வது மனைவியும் கோபித்துக்கொண்டு அவரை பிரிந்து சென்றுவிட்டதால் மன வேதனை அடைந்த பெரியதுரை சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.


Tags:    

Similar News