உள்ளூர் செய்திகள்

கடையத்தில் மது விற்ற 3 பேர் கைது

Published On 2022-06-13 09:25 GMT   |   Update On 2022-06-13 09:25 GMT
  • போலீசார் வெய்க்காலிபட்டி பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • 15 மது பாட்டில்கள், ரூ.5,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.

நெல்லை:

கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று வெய்க்காலிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் வெய்க்காலிபட்டியை சேர்ந்த ராஜேஷ்(வயது 29), அருன் ஜீசஸ் என்ற விஜித், டி.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(42) என்பதும், 3 பேரும் அங்குள்ள பாரில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரூ.5,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News