உள்ளூர் செய்திகள்
கோப்பு காட்சி

களியக்காவிளை அருகே 200 கிராம் கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது

Published On 2022-05-28 10:03 GMT   |   Update On 2022-05-28 10:03 GMT
களியக்காவிளை அருகே 200 கிராம் கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது
கன்னியாகுமரி. மே 28-

கன்னியாகுமரி மாவட்ட தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கை கள் எடுத்து வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.  

இந்நிலையில்  இன்று  களியக்காவிளை காவல் நிலைய  சப் இன்ஸ்பெக்டர் திரு.சாமி   தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாலிபர் நின்றுக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் களியக்காவிளை ஆர்சித்தெரு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (வயது 30) என்பது தெரியவந்தது.

அவரை சோதனை செய்த போது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இதனை களியக்காவிளை பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News