search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா பறிமுதல்"

    • புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்த காசித் துரை தலைவனார் (வயது 23), தூத்துக்குடியை சேர்ந்த முத்து கல்யாணி(22), கீழப்புதூரை சேர்ந்த லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த கலைச்செல்வன்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த சுமார் 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.

    உசிலம்பட்டி:

    தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் மார்நாடு கருப்பசாமி கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருந்தது கண்டறியப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக வருசநாடு அருகே உள்ள கும்மணந்தொழுவை சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த வீரமணி மற்றும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கர மையிலா என்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.

    இதில் கும்மணந்தொழுவைச் சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இருவரும் கோவை 110 பட்டாலியன் பிரிவில் பிராந்திய ராணுவ படை வீரர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

    மேலும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கரமையிலா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவில் வசித்து வருவதாகவும், அவர் மூலம் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் வைத்து பிரித்து எடுத்து செல்ல முயன்றபோது பிடிபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • கஞ்சா பொட்டலங்கள் குறித்து மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பம்ப் ஹவுஸ் அருகில் இன்று காலை 13 பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. அவ்வழியாக வந்த மீனவர்கள் அந்த பொட்டலங்கள் என்னவென்று தெரியாமல் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரியவந்தது.

    உடனடியாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது 13 பொட்டலங்களிலும் தலா 2 கிலோ வீதம் 26 கிலோ கஞ்சா இருந்ததும், இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்பதும் தெரியவந்தது.

    இலங்கைக்கு கடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Untitled-3: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே விருப்பாச்சி நகரை சேர்ந்த சதீஷ் என்கிற கந்தசாமி (30), ஜெக்கேரியை சேர்ந்த முருகேசன் (46), ராசிபுரம் கத்தநாச்சம்பட்டியை சேர்ந்த தினேஷ் (29), அண்ணாநகர் காலனியை சேர்ந்த கார்த்தி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஓசூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 50 கிலோ எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்பு கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, ராசிபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் கூறுகையில், கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 83 வழக்குகள் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 124 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக 19 குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 666 முடக்கப்பட்டு உள்ளது. அவர்களது சொத்துக்கள் முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • காரில் ஏராளமான சாக்கு மூட்டைகளில், கஞ்சா இருப்பது தெரியவந்தது.
    • கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை பெரியசாமி புரம் பகுதியில் சூரங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மதுரையில் இருந்து வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் வேம்பார் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி தலைமையிலான போலிசார் அந்த காரை துரத்தி சென்று சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

    அப்போது காரில் ஏராளமான சாக்கு மூட்டைகளில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த தர்மேந்திரன், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த சிவராஜ் ஆகிய 2 பேரை பிடித்து சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் மதுரையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அதனை அவர்கள் படகு மூலமாக இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதும், சாக்கு மூட்டைகளில் மொத்தம் 540 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

    இக்கடத்தல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
    • 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    வேலூர்:

    ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.

    அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகிக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன.

    அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    • தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடி படை போலீசார் ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 3 ½ கிலோ கஞ்சாவை கண்டெடுத்தனர்.

    இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளரான முதலியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் எம்.டெக். பட்டதாரி ஆவார்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவருடைய நண்பர் அஸ்வின் (34) மூலம் பெங்களூருவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து புதுவை திருமால் நகரை சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி அஸ்வினையும் போலீசார் கைது செய்தனர். விடுதி அறையில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட வினோத்குமார் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வின் உறவினர் ஆவார். மற்றொருவரான அஸ்வின் புதுவை அரசியல் கட்சி நிர்வாகியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போதை மாத்திரைகள் விற்பனை அரசு ஊழியர்களின் உதவியுடன் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
    • பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பங்களாமேடு பகுதியில் அவர்கள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா கஞ்சா, 48 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    உசிலம்பட்டி அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர் ஜெயராமன், செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் கண்ணன் ஆகியோர் உதவியுடன் போதை மாத்திரைகளை வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் சிலருடன் இணைந்து கஞ்சா விற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். மேலும் விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டி கருப்புக்கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சரவணன், குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், கவுண்டன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பதும் தெரியவந்தது.

    போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள பங்களாமேடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடந்து வந்ததும், அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே இதற்கு உடந்தையாக இருந்ததும் தனிப்பிரிவு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீவிரமாக செயலாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் அதிகாரிகளும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போதை மாத்திரைகள் விற்பனை அரசு ஊழியர்களின் உதவியுடன் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அதிகாரிகளும், போலீசாரும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போலீஸ் நிலையம் அருகிலேயே தைரியமாக கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மதுரை மாட்டுத்தாவணியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை மாவட்ட, நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமூக விரோத கும்பல் கஞ்சா விற்று வருகிறது. இந்தநிலையில் மதுரை மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள மீன் மார்க்கெட் அருகே கழிவு நீரேற்றும் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளதுரை, போலீசார் அந்தப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் கட்டை பையுடன் சந்தேகத்திற்கி டமான வகையில் நின்றி ருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஆனால் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி யடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஆந்திர மாநிலம் ராயபுரம் இந்தூர் காலனியை சேர்ந்த லோகேஷ்வர பிரசாத் மனைவி பத்ம சலபக்கா பத்மஸ்ரீ(வயது 32) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஏ.டி.எம்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி மதுரையில் சிலரிடம் விற்க வந்துள்ளார். அவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார்? மதுரையில் உள்ள கூட்டாளிகள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதூர் பாண்டியாபுரம் பகுதியில் வந்த 2 சொகுசு கார்களை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.
    • போலீசார் சுதாரித்து கொண்டு காரில் வந்த 6 பேரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் தனிப்படை போலீசார் தூத்துக்குடி-எட்டையாபுரம் சாலையில் சுங்கச்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதூர் பாண்டியாபுரம் பகுதியில் வந்த 2 சொகுசு கார்களை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டைகளில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். எனினும் போலீசார் சுதாரித்து கொண்டு காரில் வந்த 6 பேரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 10 பேரை போலீசார் பிடித்து கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகே கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மீண்டும் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ராஜமுந்திரி பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர்.
    • தூத்துக்குடிக்கு கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு, பிரெட்ரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சோதனை செய்தனர். அதில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னரின் மேல் பகுதியில் ஒரு ரகசிய அறை 300 பிளாஸ்டிக் பைகளில் 600 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி ஆகும். இதையடுத்து லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில், லாரி டிரைவர் புதுச்சேரி ஏனாம் பகுதியை சேர்ந்த சத்திபாபு (வயது 39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில் பிள்ளைவிளையைச் சேர்ந்த மத போதகர் ஜான் அற்புதபாரத் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாரியையும் போலீசார் கோவில்பட்டி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மது விலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு சிவசுப்பு, இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ராஜமுந்திரி பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். அதனை தூத்துக்குடிக்கு கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் கூறியதன் பேரில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான் இதில் மேலும் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்பதால் அவரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
    • ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

    ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாட்னாவில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது பின்பக்கம் முன்பதிவில்லா பெட்டி உள்ள கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×