உள்ளூர் செய்திகள்
காட்டாகரம் ஊராட்சியில் வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா
காட்டாகரம் ஊராட்சியில் வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள காட்டாகரம் ஊராட்சியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து சந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், விதைகள், மானிய விலையில் மருந்து தெளிப்பான் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் காட்டாகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், உதவி வேளா ண்மை அலுவலர் வல்லரசு, வேளாண்மை அலுவலர் சிவரஞ்சினி, உதவி பொறியாளர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் கவுசல்யா மாதேஷ், ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.