உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

2 இளம்பெண்கள் மாயம்

Published On 2022-05-22 09:40 GMT   |   Update On 2022-05-22 09:40 GMT
பாளை கே.டி.சி. நகர் மற்றும் கயத்தாறு பகுதியை சேர்ந்த 2 இளம்பெண்கள் மாயமாகினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:

பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள கிறிஸ்டின் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகள் பானுமதி (வயது 29), பட்டதாரி.  இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக பாளை தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான பானுமதியை தேடி வருகின்றனர்.

இதேபோல் கயத்தாறு அருகே உள்ள வில்லிச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் மனைவி சுபா (35). கணவன்-மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு சுதாகர் மட்டும் வெளிநாடு சென்றார். சுபா குழந்தைகளுடன் வில்லிச்சேரியில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக சென்று வருவதாக கூறி சென்ற சுபா பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்.
Tags:    

Similar News