உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம்
பாலக்கோடு பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம் நடைபெற்றது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தரும்படி தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்,
குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்பது குறித்தும் பேரூராட்சி சார்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலக்கோடு பேரூராட்சியில் குப்பை இல்லா நகரம் உருவாக்க ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில் பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டு சிறு சிறு குழுக்களாக பிரிந்து 18 வார்டுகளிலும் துப்புரவு பணியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்சி பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக த்தில் வட்டாட்சியர் ராஜசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரூராட்சி தலைவர் முரளி தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் செண்பகவள்ளி, செயல் அலுவலர் டார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி, அரசுமருத்துவமனை, பொது பணித்துறை அலுவலகம்,தக்காளிமண்டி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதி வழியாக சென்று குப்பைகளை சேகரித்தனர்.
குப்பை இல்லா நகரம் உருவாக்குவோம் என்ற கோஷங்கள் முழங்கினர்.