உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரியும் காட்சி.

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது

Published On 2022-05-18 11:45 GMT   |   Update On 2022-05-18 11:45 GMT
திருவாடானை அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்து தீப்பிடித்தது.
தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவர் தனது உறவினரான தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஹரிகிருஷ்ணன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

 ராமேஸ்வரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடி அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார்  சைக்கிளில் சென்ற 2 பேரும் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரோட்டில் கவிழந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தேவ கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News