உள்ளூர் செய்திகள்
file photo

தீக்குளித்த தொழிலாளி சாவு

Published On 2022-05-12 09:38 GMT   |   Update On 2022-05-12 09:38 GMT
தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்சி:

முசிறி அடுத்து அந்தரப்பட்டியை சேர்ந்த பெரிய சுருளி மனைவி சுப்புலட்சுமி (வயது 55) இவரது கணவர் 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.தனது மகன் வேல்முருகனுடன்(வயது 32) வசித்து வந்தார். வேல்முருகனுக்கு திருமணமாகி 4 வருடத்துக்கும் முன்பு மனைவி பிரியா இறந்துவிட்டார். 

மகள் சபிதா(வயது9) மற்றும் தாயுடன் கூலி வேலை செய்து கொண்டு வசித்து வந்தார் சம்பவத்தன்று  வேல் முருகன்தனது தாய் சுப்புலட்சுமியிடம்   மது குடிப்பதற்கு பணம் கேட்டபோது, சுப்புலட்சுமி கொடுக்க மறுக்கவே, கோபத்தால் தன் மீது தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 


அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வேல் முருகன் இறந்துவிட்டார். என சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீஸ் உதவி ஆய்வாளர் மாலிக் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News