உள்ளூர் செய்திகள்
உடன்குடி பஜாரில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
உடன்குடி பஜாரில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உடன்குடி:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து உடன்குடியில் தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க. மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, இளங்கோ, சிராஜூதீன், ஷேக் முகம்மது, ஜெயப்பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் பேரூராட்சி உறுப்பினர்கள் பிரதீப், ராஜேந்திரன், பஷீர், மும்தாஜ், முன்னாள் கவுன்சிலர் சலீம், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரவியம், தங்கம், ஹரிகிருஷ்ணன், அன்வர்சலீம், முருகன், அண்டோ, மோகன், நிர்மல்சிங், துரைசங்கர், சக்தி சங்கர், ராஜாபிரபு, உட்பட தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.