உள்ளூர் செய்திகள்
கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2022-05-07 15:01 GMT   |   Update On 2022-05-07 15:01 GMT
சென்னையில் மேலும் 30 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 89-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 30 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 466-ல் இருந்து 499-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படியுங்கள்.. சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Tags:    

Similar News