உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாலிபர் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-05-06 09:50 GMT   |   Update On 2022-05-06 09:50 GMT
நெல்லை அருகே வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
நெல்லை:

நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரி பார்வதி அம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர்  பேச்சிமுத்து (வயது 29).

இவர் சம்பவத்தன்று முனைஞ்சிப்பட்டி பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

 அப்போது தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள மாடசாமி கோவில் அருகே நிறுத்திவிட்டு காய்கறி வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்துள்ளார்.

அப்போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது தொடர்பாக பேச்சிமுத்து மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News