உள்ளூர் செய்திகள்
சரத்குமார்

நாளை வணிகர் தினம்- சரத்குமார் வாழ்த்து

Published On 2022-05-04 07:56 GMT   |   Update On 2022-05-04 07:56 GMT
தமிழ்நாடு மீதும், தமிழர் உரிமைகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு முக்கிய பிரச்சனைகளில் பங்கெடுத்த வணிகர்கள், மென்மேலும் உயர வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து, ஈட்டிய பொருளை தனக்கு மட்டும் என்றில்லாமல், பொதுநலனுக்கும் பயன்படுத்தக்கூடிய வணிகர்கள், தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினமான மே 5-ந்தேதியை வணிகர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறார்கள்.

வணிகர்கள் மீதான அத்துமீறல்கள் ஒடுக்கப்படவும், வணிகர்களின் நீண்ட நாள் முக்கிய கோரிக்கையான வணிகர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அவர்கள் நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மீதும், தமிழர் உரிமைகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு முக்கிய பிரச்சனைகளில் பங்கெடுத்த வணிகர்கள், மென்மேலும் உயர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News