உள்ளூர் செய்திகள்
கோவை: சிறை காவலர் குடியிருப்பு வளாகத்தில் புகுந்த மர்ம நபர்
காந்திபுரத்தில் உள்ள சிறை குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை மத்திய சிறை பாரதியார் ரோடு பகுதியில் சிறை குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குடியிருந்து வருகின்றனர்.
நுழைவு வாயில் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருபார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி அத்துமீறி சிறை குடியிருப்பு வளாகத்தில் நுழைந்தார்.பின்னர் அந்த வாலிபர் வருவோர், போவோரை தகாதவார்த்தைகளால் பேசி திட்டி ரகளையில் ஈடுபட்டார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஜெயில் வார்டன் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்தார்.
இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து ஜெயில்வா ர்டன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் யார் ? அவர் எவ்வாறு சிறை குடியிருப்பு வளாகத்தில் நுழைத்தார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.