உள்ளூர் செய்திகள்
மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த பெண் சாவு
மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி :
திருச்சி பெரிய மிளகுபாறை காமராஜர் மன்றத்தில் பகுதியை சேர்ந்தவர் ரெய்னா மேரி (வயது32). இவர் தம்பியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை பார்த்த அவரின் உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.