உள்ளூர் செய்திகள்
மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலைய பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளா கத்தில் பள்ளி மேலாண் மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன் சிறப்பு பார்வையா ளராக கலந்து கொண்டார். துணை தலை வர் புஷ்பலதா முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரி யர் ஞானசேகரன் வரவேற்று பெற் றோர்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மேலாண்மை குழு நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பெற் றோர்கள் முன்னிலையில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டனர். தலைவியாக ஞானசவுந்தரி, மற்றும் துணை தலைவியாக அழகம் மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 15 பேர் மாணவர்களின் பெற் றோர்கள் தேர்ந் தெடுக்க பட்டனர்.
தொடர்ந்து புதிய நிர் வாகிகள் பெற்றோர்கள் முன்னிலையில் விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப் பட்டன. முடிவில் பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி நன்றி கூறினார்.