உள்ளூர் செய்திகள்
ஆம்பூரில் கத்திகுத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

ஆம்பூர் தெருவில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை எடுக்க சொன்னவருக்கு கத்திகுத்து

Published On 2022-04-23 10:37 GMT   |   Update On 2022-04-23 10:37 GMT
ஆம்பூர் தெருவில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை எடுக்க சொன்னவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் பங்காரு சாமி தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 45) இவர் பைபாஸ் சாலையில் போர்வெல் மோட்டார் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் பக்கத்து தெருவை சேர்ந்தவர்கள் ராகேஷ் (27), மகேஷ் இருவரும் (26) அண்ணன் தம்பி. நேற்று ரமேஷின் வீட்டிற்கு உறவினர்கள் காரில் வந்தனர். 

அப்போது தெருவில் ஆட்டோ ஒன்று நின்றது. அந்த ஆட்டோவை எடுக்குமாறு ரமேஷ் கூறியதாக தெரிகிறது இதனால் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த மகேஷ் கத்தியால் ரமேஷை குத்தியதாக கூறப்படுகிறது. 

அதை தடுக்க வந்த ரமேஷின் மனைவிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ரமேஷ் அவரின் மனைவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ரமேசை மீட்டு மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் ராகேஷ், மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Tags:    

Similar News