உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆடு திருடிய வாலிபர் கைது

Published On 2022-04-13 09:28 GMT   |   Update On 2022-04-13 09:28 GMT
சிவந்திபட்டி அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை சிவந்திபட்டி அருகே உள்ள வடக்கு வெட்டியாவண்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60).  

இவர் சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.  சம்பவத்தன்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

 மாலையில் வீடு திரும்பும்போது அதில் ஒரு ஆட்டை காணவில்லை.

இதுதொடர்பாக அவர் சிவந்திபட்டி போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், ஆட்டை திருடியது பாளை அண்ணா நகர் 4-வது தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 21) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆட்டை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ஆட்டை மீட்டு ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News