உள்ளூர் செய்திகள்
பால்குட விழா நடந்தது.

வீரமகா காளியம்மன் கோவிலில் பால்குட விழா

Published On 2022-04-04 09:51 GMT   |   Update On 2022-04-04 09:51 GMT
பாபநாசம் வீரமகா காளியம்மன் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது.
பாபநாசம்:

பாபநாசம் வங்காரம்பேட்டை 108 சிவாலயம் வீரமகாகாளியம்மன் கோவிலில் பால்குட உற்சவ விழா நடைபெற்றது. அது சமயம் பாபநாசம் குடமுருட்டி ஆற்றிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, வேலெடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தலும், இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாபநாசம், வங்காரம்பேட்டை, 108 சிவாலயம், கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை வீரமாகாளியம்மன் படுகளம் பார்த்து வீதியுலா வருதல், திருநடன திருவிழா நடைபெறுகிறது.
Tags:    

Similar News