உள்ளூர் செய்திகள்
மயிலம் அருகே கார் மோதி விபத்து- கூட்டுறவுத்துறை ஊழியர் பலி
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலம்:
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 55). இவர் வடமங்கலத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் விற்பனையாளராக பணிபுரிந்தார்.
இவர் நேற்று இரவு 11 மணி அளவில் அவரது மோட்டார் சைக்கிளில் கோட்டேரிப்பட்டு என்ற இடத்துக்கு சென்றார். வழியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கி சென்ற கார் விஸ்வநாதன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.