உள்ளூர் செய்திகள்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மேலும் 3 வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

Published On 2022-03-15 02:34 GMT   |   Update On 2022-03-15 02:34 GMT
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை:

கோவையில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.

2016 முதல் 2021-ம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக 58 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News