என் மலர்

    நீங்கள் தேடியது "AIADMK"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
    • சுதாகர்ரெட்டி கூறும்போது கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜனதா துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது. கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை நடக்கிறது என்றார்.

    மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கூறும்போது, கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    • கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக வெளியான அறிவிப்பு குறித்து, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் பேசிய அவர், "ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர். மாநிலத்தின் உரிமையை காக்க பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும். தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க. முன்னெடுக்கும்."

    "மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறிவிட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயின்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்க முடியாத சுமையை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றி இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் தி.மு.க. கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.

    இது தொடர்பான அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதன்படி தமிழகத்தின் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் அக்டோபர் 6-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமல், குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காததற்கு தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    மேலும் குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட இருக்கிறது. இதோடு உச்சநீதிமன்ற ஆணை படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை.
    • மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளில் ஸ்பேசஸ்-இல் சிறப்புரை வழங்கினார். அதில் பேசிய அவர், "சமூக வலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல், சமூகத்தை முன்னேற்றுவதற்கான தி.மு.க. கொள்கைகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்."

    "பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை; நம்முடைய கருத்துகளை - கொள்கைகளை இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான். ஃபேஸ்புக் - யூடியூப் - வாட்ஸ்அப் - ட்விட்டர் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் – டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது. மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்."

    "அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் பொய்ச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதற்காகவே சம்பளம் கொடுத்து வேலைக்கும் – கூலிக்குத் தனியாகவும் ஆட்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்றைக்காவது கொள்கையைப் பேசிப் பார்த்து இருக்கிறீர்களா? சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஆதரித்து – வெறுப்பை விதைக்கும் பா.ஜ.க.வால் அதன் கொள்கையை தமிழ்நாட்டில் பேச முடியாது. அ.தி.மு.க.விற்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது," என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க. தேசிய தலைமையிடம் பேசிக் கொண்டு வருகிறேன்.
    • அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியுடன் இனி எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

    இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என்று அறிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், " கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க. தேசிய தலைமையிடம் பேசிக் கொண்டு வருகிறேன். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே கூறுகின்றீர்கள். பா.ஜ.க.-வுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்வது யார் என உங்களுக்கு தெரியும்."

    "பிரதமருக்கு அருகில் இருந்துவிட்டு தற்போது உறவு இல்லை என்று சொல்வது யார்? பா.ஜ.க. தேசிய தலைமையிடம், மாநில தலைமையை மாற்ற கோரிக்கை வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது. மூன்றாவது முறையும், நாட்டை ஆள்வதற்கான தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்."

    "அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது.
    • அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்தது.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி முறிவு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அ.தி.மு.க. அறிவித்தது.

    பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் சமூக வலைதளங்களில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்கள் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.

    இந்த நிலையில், அ.தி.மு.க.-வை போன்றே தமிழக பா.ஜ.க.வினரும் அ.தி.மு.க. விலகலை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க.வுடன் இன்றும் கூட்டணி இல்லை, இனி என்றும் கூட்டணி இல்லை.
    • கூட்டணி முறிவு குறித்து தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது பா.ஜ.க. உடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார்.

    இது பற்றி அவர் பேசும் போது, பா.ஜ.க.வுடன் இன்றும் கூட்டணி இல்லை, இனி என்றும் கூட்டணி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சந்திக்க தயார். கூட்டணி முறிவு குறித்து தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாவது உறுதியாகி இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க.-வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவிப்பு.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் இடையே இருந்து வந்த கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் தலைவர்கள் பற்றி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அவதூறாக பேசியது, கொள்கைகளை விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பா.ஜ.க.-வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. தெரிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.த. அறிவித்து இருப்பது பற்றி பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பேசும் போது, "தற்போது யாத்திரையில் இருப்பதால், அ.தி.மு.க. வெளியிட்ட அறிக்கையை என்னால் படிக்க முடியவில்லை. தற்போதைய சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக எங்களது தேசிய தலைமையே கருத்து தெரிவிக்கும். ஊடகத்தை சார்ந்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கென தனி கோட்பாடுகள் உள்ளன. எங்களது தேசிய தலைமை சரியான நேரத்தில் கருத்து தெரிவிக்கும்," என்று தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் புதிய தேர்தல் கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தனித்து தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் இடையே இருந்து வந்த கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் தலைவர்கள் பற்றி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அவதூறாக பேசியது, கொள்கைகளை விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பா.ஜ.க.-வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. தெரிவித்து இருக்கிறது. மேலும், பா.ஜ.க. மட்டுமின்றி, அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அ.தி.மு.க. விலகியுள்ளது.

     

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால், தமிழகத்தில் புதிய தேர்தல் கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணியும், பா.ஜ.க. தலைமையில் புதிய கூட்டணியும் உருவாகும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகள் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இரண்டு திராவிட கட்சிகளை எதிர்த்து களம்காண வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தனித்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது.
    • அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்தது.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி முறிவு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அ.தி.மு.க. அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட துவங்கியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo