உள்ளூர் செய்திகள்
நாகர் சிலை உடைப்பு

கருங்கல் அருகே அம்மன் கோவிலில் நாகர் சிலை உடைப்பு

Published On 2022-03-14 09:11 GMT   |   Update On 2022-03-14 09:11 GMT
கருங்கல் அருகே அம்மன் கோவிலில் நாகர் சிலையை மர்ம நபர்கள் உடைத்தனர்.
கன்னியாகுமரி:

கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்று மாங்கன்றுவிளையில் ஸ்ரீ பால பத்ரேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் தற்போது புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. கோவிலின் பின்புறம் ஒரு ஐந்து தலை நாகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது.

சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் ஐந்து தலை நாகர் சிலையின் மூன்று தலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மறுநாள்காலையில் அதனைக்கண்ட ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து மாங்கன்றுவிளை இந்திராநகர் ஊர்த்தலைவர் ராமச்சந்திரன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் நாகர் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபரை கருங்கல் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News