உள்ளூர் செய்திகள்
.

மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

Published On 2022-03-14 03:32 GMT   |   Update On 2022-03-14 03:32 GMT
மல்லசமுத்திரம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சித்தன் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62). இவருடைய மனைவி மாதேஸ்வரி (60). இவர்கள் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மோர்பாளையம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.

கணவன்--மனைவி 2 பேரும் மொபட்டில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மோர்பாளையம் சந்தைக்கு வியாபாரம் செய்ய சென்றனர். பின்னர் வியாபாரத்தை முடித்து கொண்டு மீதமுள்ள காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

 மோர்பாளையத்தை அடுத்து தனியார் மில் அருகே சென்றபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் மொபட் இறங்கியதில் நிலைதடுமாறியது. இதில் சுப்பிரமணி, மாதேஸ்வரி இருவரும் மொபட்டில் இருந்து தவறி சாலையில் விழுந்தனர். அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மல்லசமுத்திரம் போலீசார் மாதேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News