உள்ளூர் செய்திகள்
.

கொங்கணாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

Published On 2022-03-08 10:17 GMT   |   Update On 2022-03-08 10:17 GMT
கொங்கணாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
எடப்பாடி:

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள கண்ணந்தேரி பகுதியில் கிணற்றில் மூதாட்டி பிணம் மிதப்பதாக கொங்கணாபுரம் போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இறந்தவர் யார்? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தவர் இருப்பாளி இந்திரா நகரை சேர்ந்த துரைசாமி என்பவரின் மனைவி பாவாய் (வயது 75) என்பதும், கடந்த 2ந் தேதி கன்னந்தேரி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News