உள்ளூர் செய்திகள்
படகுத்துறையில் படகுகள் ஓய்வெடுப்பதை படத்தில் காணலாம்.

கடல் சீற்றம்: விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலைக்கு 3 மணி நேரம் தாமதமாக தொடங்கிய படகு போக்குவரத்து

Published On 2022-01-28 09:31 GMT   |   Update On 2022-01-28 09:31 GMT
கன்னியாகுமரியில் பயங்கர சூறாவளி காற்று வீசியதால் திருவள்ளுவர் சிலைக்கு இன்று முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் இன்று காலை திடீர் என்று பயங்கர சூறாவளி காற்றுவீசியது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் காலையில் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சீற்றம் தணிந்ததைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதேசமயம் திருவள்ளுவர் சிலைக்கு இன்று முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகள் படகில் சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, சிலுவை நகர், புதுக்கிராமம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் ஆகிய கடற்கரை கிராமங்களிலும் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.

இதனால் குறைந்த அளவு கட்டுமரம் மற்றும் வள்ளத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனால் இன்று மீன் வரத்தும் குறைவாக இருந்தது. மீன் விலையும் அதிகமாக இருந்தது.நெத்திலி, சாளை போன்ற சிறுரக மீன்களே கிடைத்தன.

Tags:    

Similar News