உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2022-01-26 09:30 GMT   |   Update On 2022-01-26 09:30 GMT
நெல்லை அருகே குடிப்பழக்கத்தை உறவினர்கள் கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

சிங்கை அருகே உள்ள காட்டுப்புலிமேடு பகுதியை சேர்ந்தவர் மோசை என்ற துரை. கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் இவரை கண்டித்தனர். இதில் மனமுடைந்த மோசை என்ற துரை கடந்த 23-ந்தேதி விஷம் குடித்தார்.

அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News