உள்ளூர் செய்திகள்
மயங்கி விழுந்து இறந்த வாலிபர்.

சேலத்தில் மயங்கி விழுந்து 2 பேர் பலி

Published On 2022-01-22 09:51 GMT   |   Update On 2022-01-22 09:51 GMT
சேலத்தில் வேறு வேறு சம்பவங்களில் 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர்.
சேலம்:

சேலம் டவுன் ஜாமியா மஸ்ஜித் அருகில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் டவுன் கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் சம்பவ இடத்திற்கு சென்று அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


சேலம் புதிய பஸ் நிலையம் பெங்களூர் பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 20-ந் தேதி சுமார் 42 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News