உள்ளூர் செய்திகள்
கொரோனா விதிமுறைகளை மீறிய நகை கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கொரோனா விதிமீறிய 6 கடைகளுக்கு அபராதம்

Published On 2022-01-21 09:50 GMT   |   Update On 2022-01-21 09:50 GMT
ஆம்பூரில் கொரோனா விதிமீறிய 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆம்பூர்:

ஆம்பூர் மற்றும் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுக்கும் விதிகளை பின்பற்றி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

வருவாய்த் துறை, போலீசார் சாலை நடந்து செல்வோர், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிய விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் ஆம்பூரில் உள்ள பஜாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு நகைக்கடையில் முக கவசம்  கொரோனா விதிமுறைகளை மீறிய கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் ஆம்பூர் காய்கறி பஜார் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News