உள்ளூர் செய்திகள்
ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் எதிரே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது தொடர்பாக மேலும் தபால் நிரப்பும் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட செயலர் ரத்தினவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.