உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விஷம் சாப்பிட்ட முதியவர் சாவு

Published On 2022-01-19 09:49 GMT   |   Update On 2022-01-19 09:49 GMT
கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்னக்கொல்லப்பட்டியைச் சேர்ந்த முதியவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 80).

இவர் நேற்று முன்தினம் விஷத்தழை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதப்பன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் என்ன காரணத்திற்காக? விஷம் சாப்பிட்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News