உள்ளூர் செய்திகள்
கடையநல்லூரில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தை சேர்ந்த முருகேசன் என்ற பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் வடகாசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவரது மகன் முருகேசன்(வயது 26).
டிப்ளமோ பட்டதாரியான இவர் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று வயக்காட்டுக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பேச்சி அங்கு சென்று பார்த்தார்.
அப்போது முருகேசன் கிணற்றில் இருந்த கல்லில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தொங்கினார்.