உள்ளூர் செய்திகள்
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.