search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடங்குளம் அணு உலை"

    • பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 1 மற்றும் 2-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் பிரிந்து வழங்கப்படுகிறது.

    மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எரிபொருள் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கூடன்குளத்தின் முதல் 2 அணு உலைகள் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்கள் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அந்த அணு உலைகளில் மின் உற்பத்தி தொடங்கும்.

    இந்நிலையில் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ( திங்கட்கிழமை) மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3,4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் 2-வது அணு உலையில் இன்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதைத்தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் இருந்து வழக்கம் போல் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார்.
    • கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    நெல்லை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார். இதில் அணுமின் நிலைய ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வளாக இயக்குனர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் முதல் அணு உலையில் 2022 -23 ஆண்டில் 14,226 மெட்ரிக் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ள்ளது . கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 638 நாட்கள் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணு மின் நிலையம் சாதனை படைத்துள்ளது.

    கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    அணுமின் நிலையம் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை அருகில் உள்ள கிராமங்களுக்கு ரூ.104 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்யப் பட்டு உள்ளன. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 193 பள்ளி களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அணுமின் நிலையம் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×