உள்ளூர் செய்திகள்
அமைச்சர் சாமிநாதனை சந்தித்து விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம்.

விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் - பல்லடத்தில் நாளை ஆலோசனை

Published On 2022-01-05 09:37 GMT   |   Update On 2022-01-05 09:37 GMT
கடந்த 7 வருடங்களாக நீடித்து வந்த விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினை கடந்த மாதத்தில் அமைச்சர்கள் பேசி உடன்பாடானது.
பல்லடம்;

விசைத்தறிகள் வேலை நிறுத்தம் குறித்து பல்லடத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த 7 வருடங்களாக நீடித்து வந்த விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினை கடந்த மாதத்தில் அமைச்சர்கள் பேசி உடன்பாடானது. ஆனாலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்னும் கூலி உயர்வு கொடுக்க மறுக்கின்றனர் .

எனவே வரும் வருகிற 9-ந்தேதி விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை 6-ந்தேதி பல்லடத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது.

மேலும் விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு குறித்து அமைச்சர் சாமிநாதனை நேரில் சந்தித்து மனு வழங்கி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News