உள்ளூர் செய்திகள்
கி வீரமணி

பெரியார் நினைவுநாள்- கி.வீரமணி தலைமையில் அமைதி ஊர்வலம்

Published On 2021-12-24 06:50 GMT   |   Update On 2021-12-24 06:50 GMT
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மணியம்மை சிலைக்கு தி.க.மகளிர் அணி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
சென்னை:

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி இன்று காலையில் அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டது. திராவிடர் கழகத்தினர் கருஞ்சட்டையுடன் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அமைதி ஊர்வலம் சிந்தாதிரிப்பேட்டை வழியே பெரியார் திடலை அடைந்தது. அங்கு பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மணியம்மை சிலைக்கு தி.க.மகளிர் அணி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. திராவிட தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார், மணியம்மை நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தனர்.

Tags:    

Similar News