உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இடுவாய் அரசு பள்ளி விவகாரம் - கலெக்டர், எஸ்.பி.க்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ்

Published On 2021-12-23 10:06 GMT   |   Update On 2021-12-23 10:06 GMT
விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியை கீதாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் கீதா (வயது 45) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ, மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியை கீதாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இதனிடையே இடுவாய் அரசுப்பள்ளி விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேசிய ஆதிதிராவிடர்ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News