உள்ளூர் செய்திகள்
நல்லம்பள்ளி அருகே வீட்டு முன்பு நிறுத்திய கார் திருட்டு
நல்லம்பள்ளி அருகே வீட்டு முன்பு நிறுத்திய கார் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது50). இவரது வீடு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. நேற்று முன்தினம் இவர் தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது கார் திருட்டு போனது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.