உள்ளூர் செய்திகள்
கைது

நடத்தையில் சந்தேகம்: மனைவியை தாக்கி கொலை மிரட்டல் - ஜே.சி.பி. ஆபரேட்டர் கைது

Published On 2021-12-20 10:32 GMT   |   Update On 2021-12-20 10:32 GMT
கோவை அருகே மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்ட பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் கோபாலசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் முரளி (வயது 30). ஜே.சி.பி. ஆபரேட்டர். இவரது மனைவி பன்னீர் செல்வமணி (26). இவர்கள் 2 பேரும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

இந்தநிலையில் முரளிக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முரளி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அவர் கோட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முரளி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News