உள்ளூர் செய்திகள்
மீனவர்களின் படகு

தமிழக மீனவர்கள் 43 பேருக்கு டிசம்பர் 31 வரை சிறை - இலங்கை கோர்ட்டு உத்தரவு

Published On 2021-12-19 20:57 GMT   |   Update On 2021-12-19 20:57 GMT
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களுக்கும் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் பிறப்பித்தார்.

Tags:    

Similar News