உள்ளூர் செய்திகள்
தற்கொலைக்கான காரணம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம்:
காங்கேயம் அடுத்த கொடுவாயில் உள்ள தனியார் நூல் மில்லில் மேலாளராக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விஸ்வநாத் மாலிக் (வயது 30) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் அவரது அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.