உள்ளூர் செய்திகள்
தற்கொலை

தர்மபுரி அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-15 09:25 GMT   |   Update On 2021-12-15 09:25 GMT
தர்மபுரி அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி கருவூல காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 43). என்ஜினீயர். இவர் வீடுகளை கட்டி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வீரமணிக்கு தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சோலைக்கொட்டாய் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வீரமணி சென்றார். அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வீரமணியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News